திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் சுட்டவர்; சொல்வதில் உண்மைகள் இல்லை: மேலதிக விசாரணைகள் முன்னெடுப்பு

🕔 December 27, 2021

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில், துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் வழங்கிய வாக்குமூலம் குறித்து, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (24) இரவு இடம்பெற்ற குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் நான்கு பொலிஸார் மரணித்ததுடன், இருவர் காயமடைந்தனர்.

இந்த நிலையில், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தரிடம், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தனது தாயைப் பார்ப்பதற்காக வீட்டுக்கு செல்வதற்கு விடுமுறை கிடைக்கப்பெறாமை காரணமாக, குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக, அந்த பொலிஸ் உத்தியோகத்தர், விசாரணைகளில் தொடர்ச்சியாக கூறி வருகிறார்.

எனினும், குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு இறுதியாக 07 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டிருந்ததாக விசாரணைகளை மேற்கொள்ளும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஒவ்வொரு மாதமும் அவர் விடுமுறை பெற்றுள்ளதாகவும், விசாரணை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அவரின் வாக்குமூலம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

தொடர்பான செய்தி: விடுமுறை கிடைக்காத ஆத்திரத்தினால் துப்பாக்கிச் சூடு: திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நடந்தவை என்ன?

Comments

புதிது பேஸ்புக் பக்கம்