வெளிநாட்டவரை இலங்கையர் திருமணம் செய்ய, பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியம்
வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்து கொள்ளும் இலங்கையர்கள், அதற்காக பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற வேண்டும் என அறிவித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பதிவாளர் திணைக்களத்தினால் சகல மாவட்ட பதிவாளர் திணைக்களங்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்த விதிகள் அமுலுக்கு வரும் வகையில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பிரஜையை இலங்கை பிரஜை திருமணம் செய்து கொள்ள வேண்டுமாயின், இதற்கு முன்னர் உரிய விசா அனுமதி பத்திரம், சிவில் நிலைமையினை உறுதிப்படுத்தும் சான்றிதழ் மற்றும் பிறப்புச் சான்றிதழ் என்பன மாத்திரம் அவசியமாக காணப்பட்டது.
இருந்தபோதிலும் வெளிநாட்டுப் பிரஜையை இலங்கை பிரஜை ஒருவர் திருமணம் செய்து கொள்ளும் போது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.