‘சரண்டர்’ ஆகிரார் மஹிந்த; அரசியலைக் கைவிடத் தீர்மானம்

🕔 December 7, 2015

Mahinda - 053ஹிந்த ராஜபக்ஷ தமனது மகன் மற்றும் மனைவியை பாதுகாக்கும் பொருட்டு, அரசியலில் இருந்து விலகுவதற்குத் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் படுகொலைச் சம்பவத்தில் யோஷித்த ராஜபக்ஷ நேரடியாக தொடர்புபட்டிருப்பதற்கான சாட்சியங்கள் வெளிவரத் தொடங்கியிருப்பதையடுத்து மஹிந்த ராஜபக்ஷ இந்த முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அண்மையில் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவுடன் இது தொடர்பான பேச்சுவார்த்தையொன்றை மேற்கொண்டுள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

வசீம் தாஜுதீனின் படுகொலைச்சம்பவத்தின் குற்றச்சாட்டிலிருந்து தனது தம்பி யோஷித்தவையும், சிரிலிய சவிய அமைப்பின் நிதிமோசடிக் குற்றச்சாட்டுகளிலிருந்து தனது தாய் ஷிரந்தியையும் பாதுகாப்பது தொடர்பிலான உத்தரவாதமொன்றை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுத் தருமாறு நாமல் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறான உத்தரவாதம் கிடைக்கும் பட்சத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சுதந்திரக் கட்சியின் செயல்பாடுகளை எதுவித இடையூறுகளும் இல்லாது முன்னெடுத்துச் செல்ல வழிசெய்யும் வகையில் மஹிந்த ராஜபக்ஷ தனது அரசியல் செயற்பாடுகளிலிருந்து விலகிக்கொள்வார் என்றும் நாமல் உறுதியளித்துள்ளார்.

இதற்கான நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்தும் வகையிலேயே வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பின் போது மஹிந்த வாக்களிப்பதில் இருந்தும் தவிர்ந்து கொண்டுள்ளார்.

தற்போது மஹிந்தவின் கோரிக்கை தொடர்பில் சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களிடமிருந்து ஆதரவையும், ஜனாதிபதியின் உத்தரவாதத்தையும் பெற்றுக் கொள்ளும் வகையில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இரகசியமான முறையில் பேச்சுவார்த்தை ஒன்றினை முன்னெடுத்திருந்தார் என செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்