மன்னிப்புக் கோரினார் மார்க் ஸக்கர்பேர்க்: ஃபேஸ்புக் தடைப்பட்டமைக்கு காரணமும் வெளியானது

🕔 October 5, 2021

ர்வதேச ரீதியில் பேஸ்புக், வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன நேற்றிரவு திடீரென செயலிழந்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.

இந்தச் செயலிகளுக்கான கான்ஃபிகரேஷன் மாற்றத்தை தவறாக செயல்படுத்தியதால் இந்த முடக்கம் நேரிட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.

எவ்வாறிருப்பினும், குறித்த சமூக வலைத்தளங்கள் இன்று (05) அதிகாலை மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளதாக ‘பேஸ்புக்’ நிறுவனம் அறிவித்திருந்தது.

அத்துடன் குறித்த இடையூறுக்கு தாம் மன்னிப்பு கோருவதாக பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவுனரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மார்க் ஸக்கர்பேர்க் தமது உத்தியோகபூர்வ ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்