பாடசாலைகள் 21ஆம் திகதி திறக்கப்படுகின்றன: ஆளுநர்கள் தீர்மானம்
பாடசாலைகளை மீளத் திறப்பது குறித்து மாகாண ஆளுநர்கள் தீர்மானம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இதன்படி எதிர்வரும் 21ம் திகதி பாடசாலைகளை திறப்பதற்கு மாகாண ஆளுனர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
200 மாணவர்களுக்கு குறைந்த ஆரம்ப பிரிவு பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாகாண சபைகளின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாடசாலைகள் இவ்வாறு திறக்கப்படவுள்ளன.