விபச்சார ஊடகங்கள் போலிச் செய்திகளைப் பரப்புகின்றன: ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் குற்றச்சாட்டு

🕔 October 4, 2021

க்கிய மக்கள் சக்தி கூட்டணி தொடர்பில் போலியான செய்திகளை விபச்சார ஊடகங்கள் பரப்பி வருவதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று (04) குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி பிரிந்துவிட்டதாக கூறி, மக்களை தவறாக வழிநடத்த சில ஊடகங்கள் முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி ஐந்தாகப் பிரிந்ததாகக் கூறி வெளியிடப்பட்ட செய்தி பொய்யானது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் பிளவு இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் கூட்டணி ஒற்றுமையாக உள்ளது என்றும் அழுத்திக் கூறிய மத்தும பண்டார;
அரசாங்கமே பிளவு நோக்கி செல்கிறது என்றார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, அவர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்