இனக் குரோதத்தை அரச ஊடகங்கள் வளர்க்கின்றன: ஊடக அமைச்சருக்கு முஜிபுர் ரஹ்மான் கடிதம்

🕔 September 30, 2021

– எம்.எஸ்.எம். ஸாகிர் –

னங்களுக்கிடையே குரோதத்தை வளர்க்கும் வகையில் அரச ஊடகங்களைப் பயன்படுத்துவது குறித்து கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தனது அதிர்ப்தியைத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ரூபவாஹினி, ஐரிஎன் உட்பட அரச ஊடகங்களில் பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் பேட்டிகள் ஒளிபரப்பப்பியமையைச் சுட்டிக்காட்டி, ஊடக அமைச்சர் டளஸ் அலகப் பெருமவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலே முஜிபுர் ரஹ்மான் தனது அதிர்ப்தியைத் தெரிவித்துள்ளார்.

‘இலங்கை முஸ்லிம்கள் நடமாடும்  குண்டுதாரிகள்’ எனக் குறிப்பிட்டு, ஞானசார தேரர் தெரிவித்திருக்கின்ற கருத்து, சிங்கள மக்களிடையே  முஸ்லிம்களைப் பற்றிய தப்பபிப்பிராயத்தை ஏற்படுத்த முடியும் என்று முஜிபுர் ரஹ்மான் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

ஊடக கலாசாரத்தை மீறி, அரச ஊடகங்களில் இவ்வாறு இன குரோதத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது குறித்து தனது அதிருப்தியை தெரிவித்துள்ள முஜிபுர் ரஹ்மான், இதற்கு முன்பு ஒரு பேராசிரியருடைய நிகழ்ச்சியில் – அப்பேராசிரியரை அவமதித்துப் பேசியமையினை அமைச்சர் கண்டித்திருந்ததையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்