நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர், பதவி விலக தீர்மானம்: அழுத்தம், மோசடிகளை காரணமாக கூறுகிறார்

🕔 September 19, 2021

நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் துஷான் குணவர்தன தமது பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார்.

தனது பதவி விலகல் கடிதத்தை நுகர்வோர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்னவுக்கு அடுத்த வாரம் வழங்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பொருட்கள் கொள்வனவு செய்வது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அழுத்தம் பிரயோகித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இரண்டு வெள்ளை பூண்டு கொள்கலன்கள் சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டமை உள்ளிட்ட பல சம்பவங்கள் தொடர்பில் தமக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாகவும் அவர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

சீனி உள்ளிட்ட பல நுகர்வு பொருட்கள் சட்டவிரோதமாக வெவ்வேறு முறைகளில் வெளியேற்றப்படுவதாகவும் நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் துஷான் குணவர்தன குற்றஞ்சாட்டியுள்ளார்.

சதொச ஊடாக கொண்டு வரப்பட்ட வெள்ளைப்பூடு, வேறு நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டு அவை மீள சதொசவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்