ஒரு லட்சம் ரூபாவுக்கு மேல் சம்பளம் பெறுவோரிடம் வரி: அரசின் தீர்மானம் குறித்து அமைச்சர் டலஸ் கருத்து

🕔 September 15, 2021

ரு லட்சம் ரூபாவுக்கு மேல் சம்பளம் பெறுவோரிடமிருந்து 05 சதவீத வரி அறவிடும் எந்த எண்ணமும் அரசாங்கத்துக்கு இல்லை என, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எந்த யோசனையும் முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (14) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடக சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

ஒரு லட்சம் ரூபாவுக்கு மேல் சம்பளம் பெறுவோரிடமிருந்து 05 சதவீதத்தை வரியாக அறவிட வேண்டுமென அண்மையில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன கூறியிருந்தார்.

அரசின் கொவிட் செலவுகளை ஈடுசெய்யும் பொருட்டு, இவ்வாறு வரி விதிக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்