வேடுவர் இனத் தலைவரின் மனைவி உள்ளிட்ட பலருக்கு கொரோனா

🕔 August 29, 2021

வேடுவர் இனத் தலைவர் உரு வரிகே வன்னிலா அத்தோவின் மனைவி மற்றும் தம்பான பிரதேசத்தில் வசிக்கும் வேடுவர்கள் பலர், கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

தனது மனைவி உள்ளிட்ட வேடுவர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை காரணமாக, அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று, வேடுவர் தலைவர் உரு வரிகே வன்னிலா அத்தோ தெரிவித்துள்ளார்.

தம்பானையிலுள்ள வேடுவர்கள் உள்ளிட்டோருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையின் போது, 44 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

அந்தப் பகுதியிலுள்ள நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்