கொரோனா தடுப்பூசி; 07 மில்லியனுக்கும் அதிகமானோர் இரண்டு ‘டோஸ்’களையும் செலுத்தியுள்ளனர்: சுகாதார அமைச்சர்

🕔 August 29, 2021

கொரோனா தடுப்பூசிகளின் இரண்டு ‘டோஸ்’களையும் நாட்டில் செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 07 மில்லியனை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடுப்பகுதிக்குள் நாட்டின் மொத்த சனத்தொகையில் 60 சதவீதமானோருக்கு தடுப்பூசியை செலுத்தும் இலக்கை அடைய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் நேற்றைய தினம் ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 52 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்தவிடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்