போதைப் பொருள் வர்த்தகர்களிடம் லஞ்சம் பெற முயற்சித்த ராணுவத்தினர் மூவர் கைது
லஞ்சம் பெற முயன்ற ராணுவத்தினர் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் வர்த்தகத்தை தொடர்வதற்காக சிலாபம் மற்றும் சீதுவை பகுதிகளில் இரண்டு பேரிடம் மேற்படி ராணுவத்தினர் லஞ்சம் பெற்றுள்ளனர்.
இதன்படி, சிலாபம் – மையக்குளம் பகுதியில் கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த பெண் ஒருவரிடம் லஞ்சம் கோரிய இரண்டு ராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் 15,000 ரூபா லஞ்சம் பெற முற்பட்டபோதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேநேரம், சீதுவை பகுதியில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஒருவரிடம் இருந்து லஞ்சம் பெறமுயன்ற ராணுவ சிப்பாய் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவர் சுமார் 80,000 ரூபாவை லஞ்சமாகப் பெற முனைந்த போது கைதானதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட ராணுவ சிப்பாய்கள் மூவரையும் பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.