பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோரை தடுத்து வைக்கும் இடம்: ஜனாதிபதி அறிவிப்பு

🕔 June 8, 2021

யங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ், கைதுசெய்யப்படுவோர், தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடமாக கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் சட்டம் 9 ஆம் பிரிவின் கீழ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோரை தடுப்புகாவல் அனுமதியுள்ள காலம் வரையில் கிருலப்பனையில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவிலேயே தடுத்து வைத்திருக்க வழிசெய்யப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (ஜுன் 04) திகதியிடப்பட்டு, மேற்படி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்