வெள்ளைக் கோட்டில்வைத்து பொலிஸ் ஜீப் மோதியதில், பாதசாரி மரணம்

🕔 April 5, 2021

வெள்ளைக் கோட்டில் வைத்து பொலிஸ் ஜீப் வண்டி மோதியதில், பாதசாரியொருவர் மரணமடைந்துள்ளார்.

மாத்தறை – திஹகொட பிரதேசத்திலுள்ள பண்டந்தர பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர் ஒருவரை ஏற்றிக் கொண்டு – மாத்தறை நீதவான் நீதிமன்றுக்குச் சொன்று கொண்டிருந்த திஹகொட பொலிஸ் நிலையத்துக்குரிய ஜீப் வண்டியே இவ்வாறு விபத்தை ஏற்படுத்தியது.

இறந்தவர் திஹகொட பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடையவராவார். ஜீப் வண்டியில் மோதுண்டதையடுத்து, மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவர் மரணமடைந்துள்ளார்.

விபத்து நடந்த வேளையில் குறித்த ஜீப் வண்டியை செலுத்தி வந்த சாரதியை, மாத்தறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்