வெலிகந்த பிரதே சபை தவிசாளர் பதவி நீக்கம்: வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

🕔 April 2, 2021

வெலிகந்த பிரதேச சபையின் தவிசாளர் பிரியந்த காவிந்த அபேசூரியவை பதவி நீக்கி வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் – குறித்த வர்த்தமானி அறிவித்தலை நேற்று வியாழக்கிழமை வௌியிட்டுள்ளார்.

ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி சமன் விக்ரமராராச்சி சமர்ப்பித்த விசாரணை அறிக்கையினை அடுத்து இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வெலிகந்த பிரதேச சபையின் தலைவர் பிரியந்த காவிந்த அபேசூரியவினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சில குற்றங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குற்றங்கள் நிரூபிக்கப்பட்டமைக்கு அமைய அவர் இவ்வாறு பதவி நீக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்