ரஞ்சனுக்கு ஆதரவாக ராஜாங்க அமைச்சர் விமலவீர குரல்: அவர் கூறியவை உண்மை எனவும் தெரிவிப்பு

🕔 February 6, 2021

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நல்ல மனிதர் என்றும், அவர் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்ததில்லை எனவும் ராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க கூறிய விடயங்களில் சில – அரைவாசி உண்மை எனவும், சில விடயங்கள் முற்றுமுழுதான உண்மை எனவும் ராஜாங்க அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

பதியத்தலாவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, அவர் இனைத் தெரிவித்தார்.

“அவர் ஒரு மோசமான மனிதர் என இந்த நாட்டிலுள்ளவர்களில் சிலர் கூறுகின்றனர். ஆனால் எனது தனிப்பட்ட கருத்தின்படி அவர் மிக நல்ல மனிதர். நாம் அவருடன் இணைந்திருக்க முடியும்.

எனது அறிவுக்கெட்டியவரை அவர் யாருக்கும் நோவினை செய்ததில்லை.

துரதிஷ்டவசமாக அவர் சில விடயங்களை நாடாளுமன்றத்துக்கு வெளியில் கூறினார். அவர் அவற்றினை நாடாளுமன்றத்தினுள் கூறியிருந்தால், சட்டப்படி அவருக்கு எதிராக எதுவும் செய்திருக்க முடியாது.

நீதித்துறையை ரஞ்சன் ராமநாயக்க அவமதித்த குற்றச்சாட்டில், அவருக்கு உச்ச நீதிமன்றம் 04 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்