நாட்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்
நாட்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இன்று செவ்வாய்கிழமை அதிகாலை வரை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 59,167 என, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்டோர் 50,337 பேர் குணமடைந்துள்ள நிலையில் 8,543 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 287 பேர் மரணமடைந்துள்ளனர் எனவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க உலகளவில் 09 கோடி 62 லட்சத்து 5,534 பேர் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், சுமார் 07 கோடி பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.