21 தேங்காய் திருடிய சந்தேக நபர், 02 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிப்பு

🕔 January 21, 2021

காலி புகையிரத நிலையத்துக்கு உரித்தான உத்தியோகபூர்வ வீட்டு வளவிலிருந்து தேங்காய் திருடிய குற்றச்சாட்டில் கைதாகி, நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட நபரொருவர் 02 லட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டு வளவிலிருந்த மரங்களில் இருந்து 21 தேங்காய்களை சந்தேக நபர் திருடியதாக ‘லங்காதீப’ செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்படி சந்தேக நபர் நேற்று புதன்கிழமை காலி பிரதம நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோதே, அவர் இவ்வாறு 02 லட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

சந்தேக நபர் காலி – கந்தேவத்தையில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேற்படி நபர் தேங்காய்களை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, புகையிரத திணைக்கள பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டு, பின்னர் காலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இதேபோன்று, தேங்காய் ஒன்றைத் திருடிய சந்தேக நபர் ஒருவர், கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது, 01 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்ட சம்பவமொன்றும் கடந்த 18ஆம் திகதி பதிவானமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்