ஐஸ் கிறீம்களில் கொரொனா: சீனாவில் கண்டுபிடிப்பு

🕔 January 17, 2021

சீனாவில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிறீம் தொடர்பாக மேற்கொள்ளபட்ட வைத்திய பரிசோதனைகளில், அவற்றில் கொரோனா வைரஸ் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் மக்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதா என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வடகிழக்கு சீனாவில் டியான்ஜின் நகரில் தயாரிக்கப்பட்ட மூன்று ஐஸ்கிறீம் மாதிரிகளில் விஞ்ஞான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்பொது, அவற்றில் வைரஸ் தொற்று படிந்திருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தொழிற்சாலையில் 4,836 ஐஸ்கிறீம் பொதிகள் பதப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றில் 2,086  ஐஸ்கிறீம் பொதிகள் தற்போது களஞ்சிய சாலைகளில் வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் 1,812 ஐஸ்கிறீம் பொதிகள் ஏனைய மாகாணங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்