இலங்கையின் அதிக வயதுடைய பெண் மரணம்

🕔 December 30, 2020

லங்கையின் அதிக வயதுடைய பெண் – நேற்று செவ்வாய்கிழமை காலமானார்.

1903ஆம் ஆண்டு மே மாதம் 03ஆம் திகதி பிறந்த இவர், மரணிக்கும் போது 117 வயதாகும்.

வேலு பபானி எனும் பெயருடைய இவர், களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட – நெஹின்ன பகுதியைச் சேர்ந்தவாராவர்.

நேற்று நோயுற்ற நிலையில் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் – சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவர் ஆசியாவில் உயிர் வாழ்ந்த இரண்டாவது வயது முதிர்ந்த நபர் எனவும் செய்தியொன்று தெரிவிக்கிறது.

ஜப்பானைச் சேர்ந்த ‘கேன் தனகா’ எனும் பெயருடைய பெண்தான் ஆசியாவில் அதிக வயது கூடிய நபர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1903ஆம் ஆண்டு ஜனவரி 02ஆம் திகதி பிறந்தவர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்