அக்கரைப்பற்றில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும், ஆயுர்வேத மருந்து வழங்கி வைப்பு

🕔 December 2, 2020

– றிசாத் ஏ காதர் –

கொவிட்-19 தொற்றின் அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள அக்கறைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, அதில் பங்கேற்றவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் ஆயுர்வேத மருந்துகளும் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர்
ஜி. சுகுனணின் அறிவுறுத்தலுக்கு அமைய, தொற்று நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி டொக்டர் நாகூர் ஆரிப் தலைமையிலான மருத்துவக் குழுவினரால் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த வகையில் அக்கறைப்பற்று பொதுச் சந்தையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் அக்கறைப்பற்று பிரதேச சபைக்குட்பட்டவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் இன்று புதன்கிழமை அக்கரைப்பற்று பிரதேசபை வளாகத்தில் நடைபெற்றது.

இதன்போது குறித்த பி.சி.ஆர் பரிசோதனையில் தங்களை ஈடுபடுத்தியவர்களுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதற்கான ஆயுர்வேத மருந்துப் பானமும் வழங்கிவைக்கப்பட்டது.

அக்கறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. றாசிக் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, கிழக்கு மாகாண மருத்துவத்துறை ஆணையாளர் டொக்டர் திருமதி ஶ்ரீதரின் வழிகாட்டுதலில் கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளர் எம்.ஏ. நபீல் தலைமையில் ஏனைய மருத்துவ உத்தியோகத்தர்களின் பிரசன்னத்துடன் மருந்துப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்