கொரோனா; இறுதித் தீர்மானம் எட்டப்படும் வரை, உடல்களை எரிக்க வேண்டும்: நிபுணர்கள் குழு
கொரோனாவினல் மரணிப்போரின் உடல்களை அடக்கம் செய்ய முடியுமா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு, தமது ஆரம்ப கட்ட தீர்மானத்தை சுகாதார பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளது.
தமது குழுவின் இறுதித் தீர்மானம் எட்டப்படும் வரை, பூதவுடல்களை தகனம் செய்ய வேண்டும் என அந்த குழு பரிந்துரை செய்துரைத்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பிலான அனைத்து விடயங்களும் ஆராயப்பட்டதன் பின்னரே, இறுதித் தீர்மானத்தை அறிவிக்க முடியும் எனவும் அந்தத் தீர்மானத்தில் மேற்படி குழு குறிப்பிட்டுள்ளது.