கண்டி மாவட்டத்தில் நில அதிர்வு
கண்டி மாவட்டத்தில் சிறியளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.
இன்று புதன்கிழமை காலை 9.28 அளவில் இந்த நில அதிர்வு பல்லேகல மத்திய நிலையத்திலும் பதிவாகியுள்ளதாக பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் தெரிவித்தார்.
இதேவேளை இந்தப் பகுதில் பல தடவை நிலஅதிர்வுகள் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.