சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை, அமர்வுகளுக்கு அழைக்காதிருக்க தீர்மானம்

🕔 November 13, 2020

பொரளை மற்றும் மகசின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை அமர்வுகளுக்கு அழைக்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று நிலைமையை கருத்திற் கொண்டு, இந்த முடிவினை நாடாளுமன்ற செயற்பாடுகள் தொடர்பான செயற்குழு எடுத்துள்ளது.

அதன்படி, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் எப்படுகின்ற சிவனேசத்துரை சந்திரகாந்தன், அகில இலங்கை இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் மற்றும் ரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர ஆகியோரை அமர்வுகளுக்கு அழைக்காமல் இருக்க தீர்மானித்துள்ளதாக, நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெணான்டோ கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், நாடாளுமன்றில் வாக்கெடுப்பு ஒன்று இடம்பெறும் சந்தர்ப்பத்தில், சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து – குறித்த உறுப்பினர்கள் சபைக்கு அழைத்து வரப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்