பேரூந்து கட்டணத்தை அதிகரிக்க, இலங்கை போக்குவரத்து சபையும் தீர்மானம்
பேருந்து கட்டணம் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடக்கம் அதிகரிக்கப்பட்ட நிலையில், இலங்கை போக்குவரத்து சபையும் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
எவ்வாறாயினும் புகையிரத கட்டணத்தில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாது என புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் நிலைமைக்கு மத்தியில் பேருந்துகளில் ஆசன இடைவெளி விட்டு பயணிகள் ஏற்றிச் செல்லப்படுவதால் பேருந்து கட்டணம் 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பயணிகளை ஏற்றிச் செல்லும் போது பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகளும் போக்குவரத்து அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.