20ஆவது திருத்தத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டார்
அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அதில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று வியாழக்கிழமை கையொப்பமிட்டுள்ளார்.
சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து அவர் கையொப்பமிட்டதாக நாடாளுமன்ற பிரதி செயலாளர் நீல் இந்தவெல தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இன்று தொடக்கம், 20ஆவது திருத்தம் சட்டமாக மாறுகிறது.
அரசாங்கம் முன்வைத்திருந்த 20ஆவது திருத்தச் சட்டமூலம், சில திருத்தங்கள் மற்றும் மாற்றங்களுடன் அண்மையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளால் நாடாளுமுன்றில் நிறைவேற்றப்பட்டது.