கொரோனாவினால் 15ஆவது நபர் மரணம்; பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 07 ஆயிரத்தை தாண்டியது

🕔 October 24, 2020

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக நபரொருவர் இன்று சனிக்கிழமை மரணமாகியுள்ளார். இதன்படி, மொத்தமாக 15 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவிக்கின்றது.

இன்று உயிரிழந்தவர் குளியாப்பிட்டி – உனலீய பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடையவராவார்.

இவர் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் இருதய நோயாளர் என தெரிவிக்கப்படுகிறது.

அதற்காக சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக கடந்த 14 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 16 ஆம் திகதி அவரின் நோய் நிலைமை தீவிரமானதால் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிக்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக குளியாப்பிட்டி வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை நிலைவரப்படி நாட்டில் இதுவரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,153 என, சுகாதார மேம்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இவர்களில் 3,644 பேர் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3,494 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்