கொரோனா; பாதுகாப்பு நடவடிக்கையை உதாரசீனம் செய்வோருககு எதிராக சட்ட நடவடிக்கை: விசேட வர்த்தமானியில் அமைச்சர் கையெழுத்து

🕔 October 15, 2020

முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை பேணாமைக்கான தண்டனை மற்றும் முக்கிய சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான விசேட வர்த்தமானியில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கையொப்பமிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவியுள்ளதாகவும் இதனால், முழு நாடும் பாதுகாப்பற்ற நிலைமைக்கு சென்றுள்ளமையினை அடுத்து அரசாங்கம் இந்த முடிவினை எடுத்துள்ளது.

இதனடிப்படையில் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகள் மிகவும் இறுக்கமாக பின்பற்றப்படும்.

இந் நடைமுறைகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை அல்லது தனிமைப்படுத்தல் நடவடிக்கை எடுக்கப்படும்.

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக 10,000 ரூபாவுக்கு மேற்படாத அபராதம் விதிக்கப்படலாம், அல்லது 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படலாம், அல்லது இரண்டு தண்டனையும் விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுவது சிறந்தது என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்