அ.ஸ. அஹமட் கியாஸ் எழுதிய நாவல்; அக்கரைப்பற்றில் சனிக்கிழமை வெளியீடு

🕔 October 1, 2020

– அஹமட் –

ம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் அ.ஸ. அஹமட் கியாஸ் எழுதிய ‘இனியெல்லாம் சுகமே’ எனும் நாவல் வெளியீட்டு விழா, நாளை மறுதினம் சனிக்கிழமை (03ஆம் திகதி) காலை 9.15 மணிக்கு, அக்கரைப்பற்று அதாஉல்லா மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

தேசிய காங்கிரஸ் தலைவர் – நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளும் இந்நிகழ்வில், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிஸாம், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எஸ். நவநீதன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகக் கலந்து கொள்ளவுள்ளவுனர்.

இலக்கிய மாமணி அ.ஸ. அப்துஸ் சமட் பதிப்பக வெளியீடாக இந்நாவல் வெளிவருகின்றது.

ஏற்கனவே, ‘எல்லாப் பூக்களுமே அழகுதான்’, ‘ஜன்னலைத் திற’ ஆகிய தலைப்புக்களில் இரண்டு நூல்களை அ.ஸ. அஹமட் கியாஸ் எழுதி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்