ஒரே பிரசவத்தில் 05 குழந்தைகள்: கொழும்பு வைத்தியசாலையில் ஆச்சரியம்
பெபிலியாவல பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் ஒரே பிரவசத்தில் 05 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
கொழும்பு டி சொய்ஸா வைத்தியசாலையில் இந்த பிரசவம் நடந்துள்ளது.
ஐந்தும் பெண் குழந்தைகள் என வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் சாகரி கிரிவெந்தெனிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை தாய் மற்றும் குழந்தைகள் நலமுடன் உள்ளதாகவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் கூறியுள்ளார்.
பெபிலியாவல பகுதியை சேர்ந்த 29 வயதான பெண்ணுக்கே ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளன.