சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு, புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிப்பு

🕔 August 10, 2020

தேர்தலில் வெற்றிப் பெற்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் விவரங்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் கையளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தேர்தலில் வெற்றிபெற்ற பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போதைய நிலையில் அவர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையை கையளித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனினும், இதுவரையில் குறித்த தகவல்களை வழங்காத நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவற்றை விரைவில் வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்