குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு, றிசாட் பதியுதீனுக்கு நீதிமன்றம் கட்டளை

🕔 July 21, 2020

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் – எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 09 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஆஜராக வேண்டுமென கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு இதற்கு முன்னர் இரண்டு சந்தர்ப்பங்களில் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் குறித்த இரு சந்தர்ப்பங்களிலும் அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகவில்லை.

இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விடயங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இதன் பின்னரே அவருக்கு அழைப்பானை விடுத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்