ஊடகவியலாளர் மஞ்சு, பௌத்த பிக்கு ஆனார்: பெயரும் மாறியது

🕔 June 8, 2020

சுவர்ணவாஹினி மற்றும் சிரச தொலைக்காட்சிகளில் கடமையாற்றிய ஊடகவியலாளர் மஞ்சு தெனுவர, இன்று திங்கட்கிழமை பௌத்த பிக்குவாக துறவு பூண்டுள்ளார்.

‘மினுவாங்கொட பிக்ஷு அப்ஹ்யாச’ நிறுவகத்தில், அவர் இவ்வாறு துறவு பூண்டார்.

சிரச தொலைக்காட்சியில் விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சிகளை வழங்கியமையினை அடுத்து, மஞ்சு தெனுவர – ஓர் ஊடகவியலாளராக பிரபலமடைந்தார். அதற்கு முன்பு அவர் சுவர்ணவாஹினி தொலைக்காடசியில் பணியாற்றினார்.

பௌத்த பிக்குவாக இவர் துறவு பூண்டதை அடுத்து, இன்று முதல் – மாதர விஜயா சீஹா தேரர் என அழைக்கப்படுவார்.

‘இந்த பணம், வாகனங்கள், வீடுகள், வேலை மற்றும் புகழ் அனைத்தும் ஒரு நிமிடத்தில் இல்லாமல் போகும் என்பதை நான் நன்கு அறிவேன். நாளை தொடக்கம் – என் கடைசி மூச்சு வரை, மஞ்சள் அங்கி மட்டுமே இருக்கும்’ என, துறவு பூணுவதற்கு முன்னதாக மஞ்சு தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதிவொன்றை இட்டிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்