கொரோனாவினால் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதற்கு எதிரான வழக்கில், ஊதியம் பெறாமல் ஆஜராகிறார் சட்டத்தரணி சுமந்திரன்
கொரோனாவினால் உயிரிழப்பவர்களை எரிக்க வேண்டும் என்கிற கட்டாய நடவடிக்கைக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் முஸ்லிம் அமைப்பொன்று தொடர்ந்துள்ள வழக்கில், ஊதியங்கள் எவற்றினையும் பெற்றுக் கொள்ளாமல் இலவசமாக ஆஜராகுவதற்கு ஜனாதிபதி சட்டத்தரணியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் முன்வந்துள்ளார்.
‘முஸ்லிம் கவுன்சில் ஒஃப் சிறிலங்கா’ எனும் அமைப்பு, மேற்படி வழக்கை தாக்கல் செய்துள்ளது.
மேற்படி அமைப்பின் கோரிக்கைக்கு அமைய சுமந்திரன் இந்த வழக்கில் ஊதியம் எவையும் பெறாமல் ஆஜராகுவதற்கு இணங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
சட்டத்தரணி சுமந்திரனிடம் பேசிய போது, அவர் இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.