அம்பியுலன்ஸ் வண்டியில் மதுபான போத்தல்கள் கடத்தல்: ஊழியர்கள் இருவர் பணி நீக்கம்
பொலநறுவை வைத்தியசாலையின் அம்பியுலன்ஸ் வண்டியில், மதுபான போத்தல்களைக் கடத்திய வைத்தியசாலை ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேவாகம காலியங்கல பகுதியில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வாகனத்திற்குள் 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் 125 சாராயப்போத்தல்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பியுலன்ஸ் வண்டியினை செலுத்தியவர் மற்றும் அவரின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இருவரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு விசாரைணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலநறுவை வைத்தியசாலைக்கு சொந்தமாக குறித்த அம்பியுலன்ஸ் வண்டி, கொரோனா தொற்றாளர்களை தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.