கொரோனா மரணம்: நாட்டில் 07ஆக அதிகரிப்பு

🕔 April 8, 2020

கொரோனா தாக்கத்தினால் நபரொருவர் இன்று புதன்கிழமை மரணமடைந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனாவினால் மரணமடைந்த 07ஆவது நபர் இவராவார். இவர் அங்கொடயிலுள்ள தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயதுடைய ஆண் ஆவார்.

இந்த நிலையில், நாட்டில் மொத்தமாக கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 188 ஆக (இன்று மாலை 07 மணி வரை) அதிகரித்துள்ளது.

புதிதாக மூன்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 42 கொரோனா நோயாளர்கள் நாட்டில் குணமடைந்துள்ளனர்.

உலகளவில் 14 லட்சத்து 31,689 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்