கொரோனா தொற்றினால் உயிரிழந்த ஐந்தாமவர், இத்தாலியிருந்து நாடு திரும்பியவர்
கொரோனா தொற்று காரணமாக நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05ஆக உயர்வடைந்துள்ளது.
வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 44 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்ததாக, சுகதார சேவை பணிப்பாளர் நாயகம் இன்று சனிக்கிழமை காலை அறிவித்திருந்தார்.
இது – கொரோனா தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்ட 05ஆவது மரணமாகும்.
இவ்வாறு மரணித்த நபர் இத்தாலியிலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவராவார்.
கடந்த மாதம் 23ஆம் திகதி வெலிக்கந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், மூன்று நாட்களின் பின்னர், அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இதேவேளை, நாட்டில் இதுவரை 159 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதாக சுகாதார மேம்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
இவர்களில் 24 பேர் சுகமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.