மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஷாபி ரஹீம், மு.காங்கிரஸிருந்து இடைநிறுத்தம்

🕔 March 19, 2020

ம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஷாபி ரஹீம், முஸ்லிம் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

கட்சியின் தீர்மானத்துக்கு மாற்றமாகவும் கட்டுப்பாட்டை மீறியும் நடந்து கொண்டதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் – கட்சியின்  யாப்பின்படி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும், உயர்பீட உறுப்பினர் பதவிலிருந்தும் இடைநிறுத்தியுள்ளார்.

கட்சியின் உயர்பீடத்தின் தீர்மானத்துக்கு மாற்றமாக அவரது நடவடிக்கை அமைந்துள்ளதால், இதுகுறித்து அவரிடம் விளக்கம் கோரப்படுவதுடன், ஏனைய ஒழுக்காற்று நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.

(மு.காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்