பொதுத் தேர்தல் கடமைகளுக்காக 02 லட்சம் உத்தியோகத்தர்கள் தேவைப்படுகின்றனர்

🕔 March 8, 2020

பொதுத் தேர்தல் கடமைகளுக்காக சுமார் 02 லட்சம் உத்தியோகத்தர்களைப் பயன்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடவுள்ள பொலிஸாரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை தேர்தலுக்காக சுமார் 12 ஆயிரம் வாக்களிப்பு நிலையங்கள் ஆயத்தப்படுத்தப்படவுள்ளன.

அதேநேரம் குறைந்த பட்சம் ஒரு வாக்களிப்பு நிலையத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பயன்படுத்தப்பட்டாலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 24 ஆயிரத்திற்கும் அதிகமான பொலிஸார் தேவைப்படுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நடைபெறவுள்ள பொது தேர்தலுக்காக சுமார் 07 ஆயிரம் மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்