ராஜகிரிய விபத்து; வாகனத்தை தான் ஓட்டவில்லை என, சம்பிக்கவின் சாரதி தெரிவிப்பு

🕔 February 25, 2020

ளைஞர் ஒருவர் மீது விபத்தை ஏற்படுத்தி அவரை கடும் காயத்துக்குள்ளாக்கிய குறித்த வாகனத்தை தான் ஓட்டவில்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதி திலும் துசிதா குமாரா ஒப்புக் கொண்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட விபத்தின் போது – குறித்த வாகனத்தை தான்தான் ஓட்டியதாக முன்பு நீதிமன்றத்தில் சம்பிகவின் சாரதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி விபத்து 2016ஆம் ஆண்டு ராஜகிரியவில் இடம்பெற்றிருந்தது.

விபத்துக்குப் பின்னர் தான் பொரல்ல பொலிஸ் நிலையத்துக்குச் சென்றதாகவும், அவர் பெற்ற ஆலோசனையின் படி தானே வாகனத்தை ஓட்டியதாக ஏற்றுக்கொண்டதாகவும் சாரதி திலும் துசிதா குமாரா பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்