அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அத்தியட்சகருக்கு எதிராக சுவரொட்டிகள்

🕔 February 15, 2020

பாறுக் ஷிஹான்

ல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின்  வைத்திய அத்தியட்சகரின் செயற்பாட்டிற்கு எதிராக சுவரொட்டிகள் பரவலாக வெளியாகியுள்ளன.

குறித்த சுவரொட்டிகள் யாவும் இன்று சனிக்கிழமை கல்முனை பிரதான வீதிகள், கடைகள் மற்றும் சந்தை பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.

இந்த சுவரொட்டிகளில் ‘வெளியேறு.. வெளியேறு; ரஹ்மான் வைத்தியட்சகரே வெளியேறு’, ‘பாலியல் குற்றவாளிகளான தாதியர்களை வெளியேற்று’ என குறிப்பிடப்பட்டு,  ‘எமது பிரதேசத்தில் அஷ்ஃரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்ற பாலியல் ரீதியான செயற்பாடுகளை கண்டும் காணாமல் செயற்பட்டு வருகின்ற வைத்திய அத்தியட்சகர்   ரஹ்மானை வெளியேற்றி புதிய நிர்வாகம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்முனையை  தூய்மைப்படுத்தும் இளைஞர்கள் அமைப்பு எனும் பெயரில் இந்த சுவரொட்டிகள் வெளியாகியுள்ளன.

மேற்குறித்த  வைத்தியசாலையில்  விசேட தர தாதிய உத்தியோகத்தராக செல்வி ஆர். தேவாமிர்ததேவி ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்திய பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக, பல்வேறு விமர்சனங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த சுவரொட்டிகள் வெளியாகியுள்ளன.

இவ்விடயத்தை மேற்படி தாதி வெளியிட்டமையை அடுத்து,  அண்மைகாலமாக விசேட தர தாதிய உத்தியோகத்தராகிய செல்வி ஆர். தேவாமிர்ததேவி உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியதாக தெரிவித்தார்.

இதனால் பெண்கள் அமைப்புக்கள் போராட்டங்களை முன்னெத்த பின்னர், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்