கொரோனா தாக்கம்: நேற்றைய தினம் மிக அதிமானோர் உயிரிழப்பு

🕔 February 13, 2020

‘கொவிட்-19′ என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமா சீனாவின் ஹூபே மாகாணத்தில் நேற்று புதன்கிழமை 242 பேர் இறந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் புதன்கிழமை ஏற்பட்ட மரணம்தான் மிக அதிமானதாகும்.

இதேபோல் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட நபர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக அதிகரித்துள்ளது.

14,840 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் இந்த தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஹூபே மாகாணத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக சீராக இருந்துவந்த நிலையில், புதன்கிழமையன்று இந்த எண்ணிக்கையில் கடுமையான உயர்வு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக சீனாவின் தேசிய சுகாதார திணைக்களம் செவ்வாய்க்கிழமையன்று கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்த செய்தியை வெளியிட்டது. அதில் செவ்வாயன்று கடந்த இரண்டு வாரங்களில் மிகவும் குறைவாக 2015 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடப்பட்டிருந்தது.

ஹூபே மாகாணத்தில் புதன்கிழமை பதிவான மரணங்களால் சீனாவில் இந்த வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1350-ஐ கடந்தது. மேலும் வைரஸ் தாக்குதலால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால் சீனாவில் ஏறக்குறைய 60,000 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இது குறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில், தற்போதைய நிலையில் இந்த வைரஸ் தொற்று எப்போது கட்டுப்படுத்தப்படும் என்று கணிப்பது இயலாது என்று கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றி உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கூறுகையில், ”தற்போதைய நிலையில் இந்த தொற்று பரவல் எந்த திசையிலும் செல்லலாம்” என்று எச்சரித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்