முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கம்

🕔 January 17, 2020

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைக் கூறினார்.

சந்திரிக்கா வகித்த அமைப்பாளர் வெற்றிடத்துக்கு ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்