டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிருந்து விக்னேஸ்வரன் நீக்கியமை சட்டவிரோதமானது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

🕔 August 5, 2019

டக்கு மாகாண மீன் பிடித்துறை அமைச்சராக பதவி வகித்த பி.​டெனிஸ்வரனை அந்தப் மைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

அமைச்சர் பதவியிலிருந்து தன்னை நீக்கியமை சட்டவிரோதமானது என தீர்ப்பளிக்குமாறு, 2018 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் பி.டெனிஸ்வரன் தாக்கல் செய்த மனுக்கு இந்த தீர்ப்பளிக்கப்பட்டது.

நீதியரசர்கள் மஹிந்த சமயவர்தன மற்றும் பிரியந்த பெர்ணான்டோ ஆகியோர் இந்த தீர்ப்பை வழங்கினர்.

இவ்வாறு அமைச்சர் ஒருவரை பதவி நீக்கம் செய்யவும், புதிய அமைச்சர் ஒருவரை நியமிக்கவும் முதலமைச்சருக்கு அரசியலமைப்பின் பிரகாரம் அதிகாரம் இல்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

அதனடிப்படையில் டெனிஸ்வரனை பதவியில் இருந்து நீக்கவும் அந்த பதவிக்காக கே. சிவனேஷன் மற்றும் பீ .குணசீலன் ஆகியவர்களை நியமிக்கவும் முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரன் எடுத்த தீர்மானம் செல்லுபடியற்றது என தெரிவித்த நீதிபதிகள், டெனிஸ்வரனுக்கு வழக்கு கட்டணத்தை செலுத்துமாறும் பிரதிவாதிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். 

வடக்கு மாகாண மீன் பிடித்துறை அமைச்சராக இருந்த பி.​டெனிஸ்வரன், ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அப்போதைய முதலமைச்சர் விக்னேஸ்வரனால் அவர் வகித்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனையடுத்து முதலமைச்சரின் தீர்மானத்தை ரத்துச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி, டெனிஸ்வரன் மேன்முறையீடு செய்திருந்தார். 

அரசியல் சாசனத்தின்படி மாகாண அமைச்சர் ஒருவரை பதவி நீக்கும் அதிகாரம் மாகாண ஆளுநருக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும், தன்னை பதவி நீக்குவதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் டெனஸ்வரன் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

வடக்கு மாகாண சபை கலைக்கப்பட்ட நிலையில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்