சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய முச்சக்கர வண்டி சாரதி கைது; புத்தளத்தில் சம்பவம்

🕔 October 9, 2015
Child sexual abuse - 01– பாறுக் ஷிஹான் –

பு
த்தளம் பிரதேசத்தில் பாடசாலை சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை  மதியம் புத்தளம் நகரப்பகுதியில் நடைபெற்றுள்ளது.

வழமை போன்று பாடசாலைக்கு சிறுமியை ஏற்றி இறக்கும் முச்சக்கர வண்டி சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தினால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர், சாரதியை தொடர்பு கொண்ட போது அவர் பதிலளிக்கவில்லை. பின்னர் நீண்ட நேரத்தின் பின்னர் சிறுமியை வீட்டில் விட்டு சென்றுவிட்டார். ஆயினும் சிறுமியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட பெற்றோர், சிறுமியை என்ன நடந்தது என கேட்டபோது, சாரதியின் கொடூர முகம் வெளிச்சத்திற்கு வந்தது.

தினமும் பாடசாலைக்கு சிறுமியை ஏற்றும் இச்சாரதி தொடர்ந்தும் இவ்வாறு சிறுமியுடன் முறைகேடாக நடந்து வந்ததோடு, விடயத்தை வீட்டில் சொல்லக் கூடாது என்றும், அவ்வாறு சொன்னால் கத்தியால் வெட்டுவேன் என்றும் பயமுறுத்தியுள்ளார். இதன் காரணமாக சிறுமியும் தனக்கு நடக்கும் விடயத்தைப் பெற்றோரிடம் மறைத்து வந்ததுள்ளார்.

எனினும் முச்சக்கர வண்டி சாரதியின் வழமைக்கு மாறான செயலும் பிள்ளையின் அலங்கோலமுமே தற்போது இச்செயலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இதனையடுத், சம்பவத்தை மறைப்பதற்கு, முச்சக்கர வண்டி சாரதியின் உறவினர்கள் சிறுமியின் தந்தையான மருந்தாளர் எம். ஜன்சீர் என்பவரை பேரம் பேசியுள்ளனர். சிறுமியின் தந்தையுடன் பேசி, இவ்விடயத்தினை நமது ஊடகவியலாளரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போது பாதிக்கப்பட்ட சிறுமி, புத்தளம் தள வைத்தியசாலையின் 09 ஆவது விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும், புத்தளம் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்  எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கை இன்னும் கிடைக்க பெறாமையினால் சிறுமி தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இச்சிறுமியின் பெற்றோரை தொடர்பு கொண்டு அடையாளம் தெரியாத  சில நபர்கள் முறைப்பாட்டை மீள பெற்றுக்கொள்ளுமாறு கேட்பதாகவும் சிறுமியின் தந்தை எம். ஜன்சீர் எமது செய்தியாளரிடம் தெரிவித்தார்.

இச்செயலில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த முச்சக்கரவண்டி சாரதியான 03 பிள்ளைகளின் தந்தை அஸ்மீர் (வயது 42) தற்போது கைது செய்யப்பட்டு, பொலிஸாரின் தடுப்பு காவலில் உள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்