றிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; ஆதரவாகவே மஹிந்த வாக்களிப்பார்: கம்மன்பில

🕔 May 19, 2019

மைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்திடாவிட்டாலும், அவர், இதற்கு ஆதரவாகவே வாக்களிப்பார் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் மஹிந்த ஏன் கையெழுத்திடவில்லை என அனைவரும் வினவுவதாகத் தெரிவித்த அவர், அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, ராஜித சேனாரத்ன ஆகிய இருவருக்கும் எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையிலும் மஹிந்த கையெழுத்திடவில்லை. ஆனால் ஆதரவாகவே வாக்களித்தார் எனவும் கூறியுள்ளார்.

அவர் எமது தலைவர், அதேப்போல் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர். எனவே அவரது பதவிக்கு பொருத்தமான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் மாத்திரம்தான் அவர் கையெழுத்திடுவார் என்றும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்