அரச நிறுவனங்களுக்குள் வெற்றிலை, பாக்குக்கு வருகிறது தடை

🕔 March 13, 2019

வெற்றிலை, பாக்கு மற்றும் புகையிலை உள்ளிட்டவற்றை அரச நிறுவனங்களுக்குள், பயன்படுத்தவும், விற்பனைச் செய்வதற்கும் அரசாங்கம் தடைவிதிக்கத்  தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அமைச்சரவையில் நேற்று செவ்வாய்கிழமை சமர்பித்த அமைச்சரவை பத்திரத்துக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக, புற்றுநோயை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்