நான்கு பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக்குவதற்கு, ஆளுநர் ஹிஸ்புல்லா அனுமதி

🕔 January 13, 2019
ட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலுள்ள நான்கு பாடசாலைகளை, தேசிய பாடசாலைகளைாகத் தரமுயர்த்துவதற்கு, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நடவடிக்கை எடுத்துள்ளார்.
வாழைச்சேனை இந்துக் கல்லூரி, செங்கலடி மகா வித்தியாலயம், களுதாவளை மகா வித்தியாலயம் மற்றும் பொத்துவில் மத்திய கல்லூரி ஆகியவற்றினையே, தரமுயர்த்துவதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்கமைய குறித்த பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ்.டி.எம்.அஸங்க அபேவர்தன, கல்வி அமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கு தேவையான தரங்களை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாழைச்சேனை இந்துக் கல்லூரி, செங்கலடி மகா வித்தியாலயம், களுதாவளை மகா வித்தியாலயம் மற்றும் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் மத்திய கல்லூரி ஆகியன பூர்த்தி செய்துள்ளதாக, மாகாண கல்வி அமைச்சு சிபாரிசு செய்திருந்த நிலையில், கிழக்கு மாகாண ஆளுநராக பதவியேற்ற ஹிஸ்புல்லா அதற்கான அனுமதியினை வழங்கியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்