நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினரை, ஆஜராகுமாறு உத்தரவு

🕔 December 7, 2018

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பெப்வரி மாதம் 26ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றை அவமதித்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்காவே, அவரை ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராம­நா­யக்க, நீதிமன்றுக்கு அவமதிப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி, மாகல்­கந்த சுதத்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமா­னப்­படை அதி­கா­ரி­ சுனில் பெரேரா  ஆகியோர் உச்ச நீதி­மன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

நாட்டில் பெரும்­பா­லான சட்­டத்­த­ர­ணிகள் ஊழல் ­வா­திகள் என்று, 2017 ஆகஸ்ட் 21 ஆம் திகதி ஊட­கங்­க­ளிடம் கருத்து வெளி­யிட்ட ரஞ்சன் ராமநாயக்க கூறியதாக, அவருக்கு எதிரான மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் இவ்­வாறு கூறி­ய­மை­யா­னது, நீதித்துறை தொடர்பில் மக்­க­ளுக்கு இருக்கும்  நம்­பிக்­கையை சீர்­கு­லைக்கும் என குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், நீதி­மன்­றத்­திற்கு அப­கீர்த்தி ஏற்­பட்­டுள்­ள­தா­கவும், இது தொடர்பில் விசாரணை நடத்தி, நாடாளுமன்ற உறுப்பினருககு எதி­ராக உரிய தண்­ட­னையை வழங்­கு­மாறும் மனு­தா­ரர்கள் கோரி­யிருந்தனர்.

இந்த நிலையில், ஊட­கங்­க­ளுக்கு ரஞ்சன் ராமநாயக்க கருத்துத் தெரிவித்த வீடியோக்களை பரி­சீ­லித்த உச்ச நீதி­மன்ற நீதி­ப­திகள், மேலோட்­ட­மாக பார்க்கும் போதே, அவர் நீதிமன்றத்தை அவ­மா­னப்­ப­டுத்தும் வித­மாக பேசு­வது தெளி­வாக தெரிவதால், அவருக்கு எதி­ராக குற்றப் பத்­தி­ரி­கையை தாக்கல் செய்ய நட­வ­டிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு கட்டளை பிறப்பித்திருந்தனர்.

அதனடிப்படையில்   சட்டமா   அதிபரினால் முதலில்  குற்றப்பத்திரிகை வரைவு முன் வைக்கப்பட்டதுடன், அவருக்கு எதிரான வழக்கை விசாரணை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், அதே குற்றச்சாட்டில் தாக்கல் செய்யப்பட்ட மற்றைய வழக்கினை  அடுத்தவாரம் 10 மற்றும் 12 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துகொள்ளவும் உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்