இலங்கை தொடர்பான ஐ.நா. அறிக்கையில், யுத்தக் குற்றவாளிகளின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு

🕔 September 17, 2015
Inner City Press - 01லங்கையில் நடந்த யுத்தக் குற்றம் தொடர்பாக, ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்றிருந்த பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு செய்தி முகவரகமான ஐ.சி.பி. தெரிவித்துள்ளது.

ஆனால், இறுதிக் கட்ட சண்டையில் நடைபெற்ற மீறல்களுக்குப் பொறுப்பான குற்றவாளிகளின் பெயர்களை வெளியிடும் நோக்கம் ஐ.நாவுக்கு இல்லையென்று  ஐ.நா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐ.நா. விசாரணை அறிக்கையில், குற்றவாளிகள் என்று எவருடைய பெயரும் உள்ளடக்கப்படாது என்றும், இது மனித உரிமை்கள் குறித்த விசாரணையேயன்றி – குற்றவியல் விசாரணையல்ல எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆயினும், இதுகுறித்து ஐ.பி.சி செய்தி முகவரகம் செய்தி வெளியிடுகையில்; ‘அனைத்துலக ரீதியில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டிருந்த ஐ.நா அறிக்கையில், முழுமையான அனைத்துலகப் பொறுப்புக்கூறும் பொறிமுறைக்குப் பதிலாக, சிறப்பு கலப்பு நீதிமன்ற முறையை, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைன் அறிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கையில் ஐ.நாவுக்கான இலங்கைத் தூதுவராக இருந்த பாலித கொஹன்ன மற்றும் ஐ.நாவுக்கான துணைத் தூதுவராக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

எனினும், இறுதிக் கட்டத்தில் வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களைப் பாதுகாப்பதற்கு அனைத்துலக தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட்டு தோல்வியடைந்த முயற்சிகள் பற்றி, இந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஐ.நா தனது செயற்பாட்டை மறைத்திருக்கிறது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம், இணையவழியாக முன்கூட்டியே கேள்விகளைக் கேட்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கவில்லை.

ஜெனிவாவில் ஊடகவியலாளர் சந்திப்புக்கு ஒதுக்கப்பட்டிருந்த நேரத்தைவிட 10 நிமிடம் முன்னதாகவே ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அதிலிருந்து வெளியேறி விட்டார்’ என்று தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்